அம்பாறை சம்மாந்துறையில், 9 மாதங்கள் நிரம்பிய இரட்டைப் பெண் குழந்தைகள், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நிந்தவூர் 14 ஆம் பிரிவு 153 மௌலானா வீதி பகுதியில், இன்று காலை வீட்டின் குளியலறையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட இரட்டைப் பெண் குழந்தைகள், வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள போதிலும், இப்படுகொலையை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் குழந்தைகளின் தாயாரான, 26 வயதுடைய சந்தேக நபர் நிஹாமுதீன் அஹமட் அமீஸா என்பவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளள்ளார்.

சம்பவம் தொடர்பில், சம்மாந்துறை பொலிஸார் அம்பாறை தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகிக்கப்படும் குழந்தைகளின் தாயார் மன நோயாளியாக காணப்படுவதாகவும், நிந்தவூர் ஆதார வைத்தியாசலைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், வீட்டில் இருந்த குழந்தைகளின் தந்தையான 36 வயதுடைய அலியார் சியாதுல் ஹக்கிடம், விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை, இரட்டைப் பெண் குழந்தைகளை தானே கழுத்து அறுத்து கொலை செய்ததாகவும், அறுத்த கத்தியை அவ்விடத்தில் வைத்துவிட்டு, பின்னர் தனது கணவரிடம் பிள்ளைகளின் கழுத்தை அறுத்து விட்டேன் என தாய் கூறியுள்ளதாக, பொலிஸாரின் விசாரணையில் இரந்து தெரிய வந்துள்ளது. (சி)

Previous articleயாழில், வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
Next articleவவுனியவில், பயணிகளின் பிரச்சினைகள் ஆராய்வு