ஆப்கானிஸ்தானில், சிறுவன் ஒருவன் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 20 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் நங்ஹகர் மாநிலத்தில், திருமண நிகழ்வொன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஆப்கான் அரச ஆதரவு படையணியொன்றின் தளபதியின் வீட்டிற்குள் நுழைந்த சிறுவன், தற்கொலை தாக்குதலை மேற்கொண்டான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமண நிகழ்வு முடிந்து உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்த வேளை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அவ்வேளை அங்கு பலர் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது, அரச ஆதரவு படையணியொன்றின் தளபதியும் கொலை செய்யப்ப்ட்டுள்ளார்.

இந்த நிலையில், தலிபான் அமைப்பு, தாம் தாக்குதலை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது. (சி)

Previous articleதரம் குறைந்த மருந்துகளையே மக்கள் பயன்படுத்துகின்றனர் : சுனில் ஹந்துன்நெத்தி
Next articleவைத்திய சேவையை அரசியலாக்க வேண்டாம் : ராஜித