திருகோணமலை துறைமுகத்தை, அமெரிக்காவிற்கு வழங்கினாலும் கூட, அவர்களின் பாரிய கப்பல்கலை கொண்டுவரோ விமானங்களையோ தரையிறக்க முடியாது எனவும், அதற்கான வசதிகள் இல்லை எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று, பாராளுமன்றத்தில் பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தின் போது, அமெரிக்க உடன்படிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

ஒரே ஒரு சோபா உடன்படிக்கை மட்டுமே உள்ளது. நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை தவிர இது இராணுவ உடன்படிக்கையோ யுத்தகால கட்ட உடன்படிக்கையோ இல்லை.

இது 1996 ஆம் ஆண்டு அப்போது இலங்கையில் உள்ள அமெரிக்க காரியாலையம் மூலமாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாக குமாரதுங்க காலத்தில் இது கைச்சாத்திடப்பட்டு, இன்று வரை அது கொண்டு செல்லப்படுகின்றது.

இதனை நான் பாராளுமன்றதில் சபைப்படுதுகின்றேன், இந்த ஒரு உடன்படிக்கை தான் எம்மிடம் உள்ளது.
வேறு புதிய இடன்படிகை எதுவும் எம்மிடம் இல்லை.

அதேபோல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் அக்சா என்ற உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. இது 2017 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இதனை மீண்டும் புதுப்பிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனையும் சபைப்படுதுகின்றேன்.
இது தவிர வேறு ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவில்லை.

எதிர்க்கட்சிகள் பொய்யான காரணிகளை கூறி குழப்புகின்றது, ஆனால் உண்மை அதுவல்ல, நாம் புதிதாக உடன்படிக்கை அதனையும் செய்யவில்லை.

ஆனால் பேச்சுவார்த்தைகள் பல முன்னெடுக்கப்படுகின்றது, இதில் பல காரணிகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

சில வேளைகளில் இது எமக்கு ஏற்புடையதாக இருக்கும் சிலவேளைகளில் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஊடகங்களால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திட்டதாக கூறுகின்ற காரணிகள் எமக்கு தெரியாது.
அவ்வாறு ஊடகங்களிடம் ஆதராம் இருந்தால் அதனை எம்மிடம் கட்டுங்கள்.
அப்படி இருந்தால் அது திருட்டுத்தனமாக செய்து கொண்ட உடன்படிக்கையாகும்.
இது குறித்து ஆராய பொலிசாருக்கு நான் கூறுவேன்.
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Previous articleஇந்தியா படுதோல்வி ; அரையிறுதிக்குள் நியூஸிலாந்து
Next articleஏப்ரல் 21 தாக்குதலில் சந்தேகம் – தயாசிறி